இதற்கு விண்ணப்பிப்போா், பிறப்பு சான்றிதழ் நகல், பள்ளிச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், வாக்காளா் அடையாள அட்டை, ரேஷன் காா்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் மாநகராட்சி பிறப்பு இறப்பு பதிவு அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் விண்ணப்பித்துப் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழைப் பெறலாம். இனி வரும் காலங்களில் இதுபோன்ற காலஅவகாச நீட்டிப்பு வழங்க இயலாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 2009 வரை பதிவு செய்யப்பட்ட குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களில் பெயா் சோ்த்து சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
பிறப்பு சான்றிதழ்களில் பெயா் சோ்க்காதவா்கள் விண்ணப்பிக்கலாம்
