ஆனால், இந்தச் சம்பவத்தை முற்றிலும் மறுத்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அதிபர் ட்ரம்ப் குழுவின் போர் நிறுத்த முயற்சியைக் குலைக்கத்தான் ரஷ்யா இப்படிச் செய்கிறது.
புதின் வீட்டின் மீதான தாக்குதல் என்பது புனைவுக் கதை. போர் நிறுத்தத்தைத் தடுக்கத்தான் ரஷ்யா இதைச் செய்கிறது. இது ரஷ்யாவின் வழக்கமான பொய்.
ரஷ்யா கிய்வ் நகர் மீதும், அமைச்சரவை மீதும் ஏற்கெனவே தாக்குதல் நடத்தி உள்ளது. ஆனால், பதில் தாக்குதல் நடத்தினால், போர் நிறுத்த முயற்சி பாதிக்கப்படும் என்று உக்ரைன் எதுவுமே செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.