புதுக்கோட்டை: பிரபல ரௌடி என்கவுண்டர்

Dinamani2f2024 072f9567f746 3b02 426f A93f B1d89421751c2fwhatsapp20image202024 07 1120at208.34.0320pm.jpeg
Spread the love

புதுக்கோட்டையில் பிரபல ரௌடி துரைசாமி என்கவுண்டர் செய்யப்பட்டார்.

திருச்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பிரபல ரௌடி துரைசாமி, புதுக்கோடையின் திருவரங்குளம் வம்பன் தைலமரக் காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, காவல்துறையினர் துரைசாமி பிடிக்கச் சென்றிருந்தனர்.

காவல்துறையினர் துரைசாமியை சுற்றிவளைக்க முயன்றபோது, காவல் அதிகாரி ஒருவரை துரைசாமி அரிவாளால் வெட்ட முயன்றதில், காவல் அதிகாரி காயமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற துரைசாமி காலில் காவல் ஆய்வாளர் முத்தையா துப்பாக்கியால் சுட்டார். இருப்பினும், துரைசாமி தப்பிக்க முயன்றதால், மார்பில் சுடப்பட்டு உயிரிழந்தார்.

இதனையடுத்து, துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *