புதுக்கோட்டை, மணியம்பளம் மேல செந்திரையைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது: 58). இவரும், இவரது மகன் ரமேஷ் மற்றும் மருமகள் பிரதீபா (வயது: 27) ஆகியோரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், பிரதீபாவுக்கும், ராஜம்மாளுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். இந்நிலையில், கடந்த 2020 ஆம் வருடம், ஜூன் மாதம், 3 ஆம் தேதி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில், கோபமடைந்த பிரதீபா, அவரது மாமியார் ராஜம்மாள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்துள்ளார். இதில் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். வல்லத்ராக்கோட்டை காவல் நிலைய போலீஸார் பிரதீபாவைக் கைது செய்தனர்.

அதோடு, புதுக்கோட்டை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்தத் தீர்ப்பில், கொலை செய்த குற்றத்திற்காக பிரதீபாவுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதத் தொகை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாத காலம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மாமியாரைக் கொன்ற மருமகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது, புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.