`புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி!’ – திமுக, காங்கிரஸ் கூட்டணி இழுபறிக்குப் பின்னால் ஸ்டாலின்

Spread the love

தனித்தனி போரட்டங்கள்… எதிரெதிர் திசையில் தி.மு.க – காங்கிரஸ்

போராட்டங்களுக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்க வேண்டும். இல்லாவிட்டால் அதில் நாம் பங்கேற்கவேண்டிய அவசியமில்லை. கூட்டணிக் கட்சி ஒத்துழைக்காவிட்டால், காங்கிரஸ் சார்பில் தனித்துப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கொடி பிடிக்கவும், கோஷம் போடவும் மட்டும் நாம் இல்லை” என்று கடுகடுத்திருந்தார்.

உடனே, “தி.மு.க-வுக்கு காங்கிரஸ் தலைமை தாங்க முடியாது. எங்கள் கொள்கையைக் கூறி கட்சியை வளர்க்கிறோம்” என்று அதற்கு பதிலடி கொடுத்தார் தி.மு.க அமைப்பாளர் சிவா. அதன் தொடர்ச்சியாக மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, “புதுச்சேரியில் கூட்டணிக்குத் தலைமை என்பது காங்கிரஸ்தான். அப்படி ஏற்காவிட்டால் தனித்துப் போட்டியிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கொந்தளித்திருந்தார்.

நாராயணசாமி

நாராயணசாமி

அப்போதிலிருந்து காங்கிரஸுக்கும், தி.மு.க-வுக்கும் இடையேயான மோதல், உரசலுக்கும் விரிசலுக்கும் இடையில் தொடர்ந்து கொண்டு வருகிறது. காங்கிரஸ் முன்னெடுக்கும் போராட்டங்களை தி.மு.க-வும், தி.மு.க முன்னெடுக்கும் போராட்டங்களை காங்கிரஸ் கட்சியும் வெளிப்படையாக தவிர்த்து வந்தன.

அந்த மோதல்தான், புதுச்சேரியில் தற்போது தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் நிலவும் இழுபறிக்குக் காரணம். ஆரம்பத்தில் இருபது தொகுதிகள் வேண்டும் என்று பேச்சுவார்த்தையை தொடங்கிய காங்கிரஸ், அதன்பிறகு 16+12+2 என்ற கணக்கில் இறங்கியது. அதாவது காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், தி.மு.க 12 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலா இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்றது காங்கிரஸ்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *