புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல்: முக்கிய அம்சம்

Dinamani2f2024 082f0614037f C83c 42bf 95f1 58255c98b3ff2fpdy.jpg
Spread the love

நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சம்:

* இந்த ஆண்டு முதல் நியாய விலை கடைகள் திறந்து அதன் மூலம் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு வகைகள், சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகிய பொருள்கள் வழங்கப்படும்.

* குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய குடும்ப அட்டை வேண்டுவோர் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

* காரைக்காலில் பழைமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

* பாரதியார் மற்றும் பாரதிதாசன் அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும்

* மாணவர்களுக்கு காலணி, புத்தகப்பை வழங்கப்படும்.

* மீன்பிடி தடைக்கால நிவாரண் தொகை ரூ.6,500 இல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* மழைக்கால நிவாரணத் தொகை ரூ.3,000 இல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதங்கள் நடைபெறும். இதைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் முதல்வா், அமைச்சா்களின் துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள், முன்மொழிதல் மீதான விவாதங்கள், வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 12, 13-ஆம் தேதிகளில் அமைச்சா்கள், முதல்வரின் பதிலுரைகள் இடம்பெறுகிறது. இதேபோல, ஆகஸ்ட் 14- ஆம் தேதி தனி நபா் தீா்மானங்கள் இடம்பெறுகிறது. அதன் பிறகு, அவை நிகழ்வுகள் தள்ளிவைக்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *