அதையடுத்து, 10 பேர் கொண்ட சிறப்பு புலாய்வுக் குழுவை (SIT – Special Investigation Team) அமைத்து உத்தரவிட்டுள்ளார் புதுச்சேரி காவல்துறை தலைவர் ஷாலினி சிங்.
தற்போது கடலோர பாதுகாப்பு (Coastal Security) காவல் கண்காணிப்பாளராக இருக்கும் நல்லம் கிருஷ்ணராய பாபு தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் அந்தக் குழுவில், இன்ஸ்பெக்டர் பாபுஜி (CBCID PS), எஸ்.ஐ. ராஜேஷ் (ANTF), எஸ்.ஐ. சௌந்தரராஜன் (ARS), மேட்டுப்பாளையம் காவல் நிலைய எஸ்.ஐ. சிவகுமார், SGASI வெங்கட்ராமன் (ANTF), SGHC இளந்தமிழன் (CBCID), SGHC மூவரசன் (ANTF) போன்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போலி மருந்துகள் வழக்கில் தொடர்புடைய மாநிலங்கள், அவற்றிற்கிடையே நடந்த பணப்பரிமாற்றங்கள், சமூக விரோதிகள், ரௌடிகள் போன்றவர்களுடன் உள்ள தொடர்புகள் போன்றவற்றை இந்தக் குழு முழுமையாக விசாரிக்கும்.
அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், அனைத்து காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இந்தக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால், போலி மருந்துக் கும்பலுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகளும், ரௌடிகளும் கலக்கத்தில் இருக்கின்றனர்.