புதுச்சேரி போலி மருந்து முறைகேடு வழக்கு: “சிபிஐயின் மௌனத்திற்குக் காரணம் இதுதான்” – நாராயணசாமி பகீர் | Puducherry former CM narayanasamy criticized CM and ministers are connected with fake medicine issue

Spread the love

போலி மருந்துகளில் நடைபெற்றிருக்கும் ஊழலால் மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அதேபோல குப்பை அள்ளுவதில் நடைபெற்றிருக்கும் ஊழல் இமாலய ஊழல். எங்கள் ஆட்சியில் குப்பை அள்ளுவதற்கு தனியார் நிறுவனத்திற்கு 5 ஆண்டுகள்தான் ஒப்பந்தம் வழங்கினோம்.

ஆனால் இவர்கள் 19 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கியிருக்கிறார்கள். அதேபோல நாங்கள் ஒரு டன் குப்பை அள்ளுவதற்கு 1,800 ரூபாய்தான் கொடுத்தோம். ஆனால் இந்த ஆட்சியில் 4,500 ரூபாய் கொடுக்கிறார்கள்.

இப்படி அனைத்திலும் ஊழல்தான். அதனால் இந்த ஆட்சி உடனே அகற்றப்பட வேண்டும். பட்டியல் சமூகத்தினருக்கு அமைச்சர் பதவி கொடுக்காமல் இதுவரை ஆட்சி நடைபெற்றதே இல்லை.

இந்த ஆட்சியில் இரண்டு பேர் பட்டியல் சமூகத்தினர் சார்பில் அமைச்சர்களாக இருந்தனர். அவர்களை ராஜினாமா செய்ய வைத்து 17% மக்கள் தொகையைக் கொண்ட பட்டியல் சமூக மக்களுக்கு, அமைச்சரே இல்லாமல் ஆட்சி நடத்தி துரோகம் செய்து கொண்டிருக்கிறார் ரங்கசாமி.

அதேபோல அந்த மக்களுக்கான சிறப்புக்கூறு நிதியை எடுத்து இலவசங்களை வழங்கி, அவர்களை வஞ்சித்து வருகிறார். போலி மருந்து வழக்கில் 10,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது.

அதில் முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. அதனால்தான் சி.பி.ஐ விசாரணை நடைபெறவில்லை” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *