இந்நிலையில், தனது பெயரில், குரலில் ஆன்லைனில் உலாவரும் போலியான விடியோ குறித்து லின்க்டின் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியதாவது:
தேவையான ஆனால் எனது சமூல வலைதளத்தில் புதியதாக இருக்கிறது. பாதுகாப்பு கருதி இந்தக் குறுஞ்செய்தியைப் பகிருகிறேன்.
சில வலைதளங்களில் எனது போலியான விடியோக்கள் இருப்பதை எனது குழுவினர் சமீபத்தில் கண்டறிந்தனர்.
அந்த விடியோக்கள் செய்யறிவினால் உருவாக்கப்பட்டவை. அதில் என்னுடைய புகைப்படம், குரல் போல உருவாக்கப்பட்டுள்ளன. அதில் இருக்கும் எவையும் நான் பேசியதல்ல. அவை எல்லாமே முற்றிலும் தவறான, சம்பந்தமே இல்லாத விளபரங்கள்.
புதுமை என்பது எப்போதும் மக்களுக்கு நல்ல நோக்கத்துடன் வருகிறது. ஆனால், அதன் பாதங்களையும் நாம் சிந்திக்க வேண்டும்.
கல்வி, மருத்துவம், விளையாட்டு, தகவல் தொடர்பு என பலவற்றில் இந்த செய்யறிவு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என கருவி. இருந்தும் இதைத் தவறாக பயன்படுத்தி பலரையும் ஏமாற்ற முடிகிறது என்றார்.