பும்ரா தோற்றுவிட்டார், விரைவில் ஓய்வை அறிவிக்கலாம்: முன்னாள் இந்திய வீரர்

Spread the love

இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா விரைவில் ஓய்வை அறிவிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா 5 போட்டிகளிலும் விளையாடமாட்டார் எனவும், மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனவும் இந்திய அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையை குறைப்பதற்காகவே அவர் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதல் போட்டியில் விளையாடிய ஜஸ்பிரித் பும்ரா, இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. அதன் பின், லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் விளையாடினார். லார்ட்ஸில் இந்திய அணி தோல்வியடைந்ததால், மான்செஸ்டர் டெஸ்ட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலுக்கு இந்திய அணி தள்ளப்பட்டது.

மிக முக்கியமான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும், அவர் விளையாடுவதை போட்டிக்கு முந்தைய நாளில் சிராஜ் உறுதி செய்தார். ஆனால், மான்செஸ்டரில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ராவின் பந்துவீச்சு அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதாக இல்லை. 33 ஓவர்கள் வீசிய அவர், இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *