மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது.
அந்த அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது. ஒரே ஆண்டில் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டுவது இதுவே முதல் முறை.
அந்த அறிக்கையில், தமிழகத்தில் 1,00,097 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

1,00,097 பேரில் 53, 542 பெண்கள்… 46,555 ஆண்கள்…
மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டிருக்கும் இந்தத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
புற்றுநோய் அதிகமாவதற்கு காரணம் என்ன, இதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று புற்றுநோய் நிபுணத்துவ மருத்துவர் ரத்னா தேவியிடம் தொடர்புகொண்டு பேசினோம்.