புலி தாக்கி பெண் பலி: குடும்பத்தைச் சந்தித்து பிரியங்கா ஆறுதல்!

Dinamani2f2025 01 282f7v2d138u2fpriyanka.jpg
Spread the love

இந்த தாக்குதலில் பலியான ராதாவின் உடல் பாதி உண்ணப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடலை சுற்றியிலும் புலியின் கால்தடங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவமறிந்து அங்குக் கூடிய அப்பகுதி பொதுமக்கள் புலியைப் பிடித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என கேரள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த ராதாவின் குடும்பத்திற்கு ரூ.11 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கேலூ உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ராதாவின் இறப்புச் செய்தி அறிந்த வயநாடு மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி, கடந்த வாரம் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *