புழல் ஏரியி​லிருந்து மீண்​டும் உபரிநீர் திறப்பு | Release of excess water from Puzhal Lake

Spread the love

திரு​வள்​ளூர் / காஞ்சிபுரம்: நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர்​வரத்து அதி​கரிப்​பால் புழல் ஏரியி​லிருந்து மீண்​டும் உபரிநீர் திறக்​கப்​பட்​டுள்​ளது; பூண்டி ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி​யாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை குடிநீர் ஏரி​களில் ஒன்​றான புழல் ஏரிக்​கு, வடகிழக்கு பரு​வ​மழை​யால் நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர்​வரத்து உள்​ளது. ஆகவே, முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக கடந்த மாதம் 15-ம் தேதி முதல் புழல் ஏரியி​லிருந்து உபரிநீர் திறக்​கப்​பட்டு வந்​தது. நீர்​வரத்து குறைந்​த​தால், கடந்த மாதம் 29-ம் தேதி புழல் ஏரியி​லிருந்து உபரிநீர் திறப்​பது நிறுத்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் நேற்று முன் தினம் பரவலாக பெய்த மழை​யால் ​புழல் ஏரிக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. நேற்று காலை 6 மணி​யள​வில் நீர்​வரத்​து, விநாடிக்கு 925 கனஅடி​யாக இருந்​தது. இதனால், 3,300 மில்​லியன் கனஅடி கொள்​ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரி​யின் நீர்​இருப்பு 2,954 மில்​லியன் கனஅடி​யாக​வும், நீர்​மட்ட உயரம் 19.71 அடி​யாக​வும் இருந்​தது. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக நேற்று மாலை 5 மணி​யள​வில் விநாடிக்கு 500 கனஅடி உபரிநீர் திறக்​கப்​பட்​டது.

பூண்டி ஏரியி​லிருந்​தும் கடந்த மாதம் 15-ம் தேதி மதி​யம் முதல் உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. நேற்று காலை 6 மணி​யள​வில் பூண்டி ஏரிக்​கு, நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர்​வரத்து விநாடிக்கு 1,280 கன அடி​யாக​வும், ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 1,000 கனஅடி​யாக​வும் இருந்​தது.

இதனால், 3,231 மில்​லியன் கனஅடி கொள்​ளளவு, 35 உயரம் கொண்ட பூண்டி ஏரி​யின் நீர்​இருப்​பு, 2,742 மில்​லியன் கன அடி​யாக​வும், நீர்​மட்ட உயரம், 33.74 அடி​யாக​வும் இருந்​தது. நேற்று மதி​யம் 2 மணி​யள​வில், பூண்டி ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2,000 கனஅடி​யாக உயர்த்​தப்​பட்​டது. புழல், பூண்டி ஏரி​களின் உபரிநீர் செல்​லும் கால்​வாய், கொசஸ்​தலை ஆற்​றின் இரு கரையோரங்​களில் தாழ்​வான பகு​தி​களில் வசிக்​கும் மக்​களுக்​கு மீண்​டும்​ வெள்​ள அ​பாய எச்​சரிக்​கை விடுத்​துள்​ளது.

பரந்​தூர் விமான நிலை​யம் அமைய உள்ள ஓடு​தளப் பகு​தி​யில் வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. வெள்ளநீர் அந்​தப் பகு​திக்கு அரு​கில் உள்ள குணகரம்​பாக்​கம் தரைப்​பாலத்தை மூழ்​கடித்​திருப்​ப​தால் அச்​சத்​துடன் அந்​தப் பாலத்தை ​மக்​கள் கடந்து செல்​லும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. இத்​தகைய இடத்​தில் விமான நிலை​யம் அமைக்​கப்​பட்​டால், அது வெள்ள அபா​யத்தை மேலும் அதி​கரிக்​கும் என்​றும் நீர்​நிலைகள் முழு​வது​மாக அழிக்​கப்​பட்​டு​விடும் என்றும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *