பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 4,500 கன அடியாக அதிகரிப்பு | amount of surplus water released from Poondi Lake has increased to 4500 cubic feet per second

1380623
Spread the love

திருவள்ளூர்/நந்திவரம்/காஞ்சி: வடகிழக்கு பரு​வ​மழை தீவிரம் காரண​மாக நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர் வரத்து அதி​கரித்​துள்​ள​தால், சென்னை குடிநீர் ஏரி​களான பூண்டி ஏரி​யில் இருந்​து, விநாடிக்கு 4,500 கன அடி, புழல் ஏரி​யில் இருந்​து, விநாடிக்கு 750 கன அடி உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​கிறது.

வடகிழக்கு பருவ மழை காரண​மாக சென்னை குடிநீர் ஏரி​களில் ஒன்​றான பூண்டி ஏரிக்கு, நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் அதி​கள​வில் நீர் வரத்து தொடங்​கிய​தால், பூண்டி ஏரி முழு கொள்​ளளவை எட்​டும் நிலை​யில் இருந்​த​தால், பாது​காப்பு கருதி முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக கடந்த 15-ம் தேதி மதி​யம் முதல் பூண்டி ஏரி​யில் இருந்து உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​கிறது.

நேற்று காலை 3,231 மில்​லியன் கன அடி கொள்​ளளவு மற்​றும் 35 உயரம் கொண்ட பூண்டி ஏரி​யின் நீர் இருப்​பு, 2,536 மில்​லியன் கன அடி​யாக​வும், நீர் மட்ட உயரம், 33.05 அடி​யாக​வும், நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர் வரத்து விநாடிக்கு 2,510 கன அடி​யாக​வும் இருந்​தது.

ஆகவே, நேற்று காலை 10 மணி​யள​வில், பூண்டி ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 4,500 கன அடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. சென்​னைக்கு குடிநீர் தரும் மற்​றொரு ஏரி​யான புழல் ஏரிக்​கு, வடகிழக்கு பரு​வ​மழை​யால் நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர் வரத்து உள்​ளது. ஆகவே, முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக கடந்த 15-ம் தேதி மதி​யம் முதல் புழல் ஏரியி​லிருந்து உபரி நீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது.

நேற்று காலை 3,300 மில்​லியன் கன அடி கொள்​ளளவு மற்​றும் 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரி​யின் நீர் இருப்பு 2,745 மில்​லியன் கன அடி​யாக​வும், நீர் மட்ட உயரம் 18.67அடி​யாக​வும், நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர் வரத்து விநாடிக்கு 860 கன அடி​யாக​வும் இருந்​தது. நேற்று மதி​யம் 2 மணி​யள​வில், புழல் ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 750 கன அடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

நந்​திவரம் – கூடு​வாஞ்​சேரி நகராட்​சி​யில், உள்ள நந்​திவரம் ஏரி நிரம்பி குடி​யிருப்​பு​களை மழைநீர் சூழ்ந்​துள்​ளது. கூடு​வாஞ்​சேரி அருகே காயரம்​பேடு ஊராட்​சி, விஷ்ணு பிரியா நகர் மற்​றும் அதனை சுற்​றி​யுள்ள பகு​தி​கள், பொன்​மார் ஊராட்​சி​யில் பல இடங்​களில் மழைநீர் சூழ்ந்​துள்​ளது.

தாம்​பரம், அதன் சுற்​று​வட்​டார பகு​தி​கள், காரணைபுதுச்​சேரி ஊராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​கள், பெரு​மாட்டு நல்​லூர் ஊராட்​சி​யிலுள்ள, செல்வி நகர் பகு​தி​களில் மழை நீர் தேங்​கி​யுள்​ளது. பாதிக்​கப்​பட்ட பகு​தி​களை செங்​கல்​பட்டு ஆட்​சி​யர் சினேகா நேற்று பார்​வை​யிட்டு உரிய நடவடிக்​கைகளை விரைந்து மேற்​கொள்ள அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டார்.

செம்​பரம்​பாக்​கம் ஏரி​யின் மொத்த நீர் கொள்​ளளவு 3,645 மில்​லியன் கன அடி ஆகும். இதன் முழு நீர்​மட்​டம் உயரம் 24 அடி ஆகும். தொடர்ந்து பெய்து வரும் மழை மற்​றும் கிருஷ்ணா நீர் வரத்து காரண​மாக ஏரி​யின் நீர் மட்​டம் 21 அடியை நெருங்​கியது. நேற்று ஏரி​யில் இருந்​து, விநாடிக்கு 500 கன அடி உபரிநீர் திறந்​து​ விடப்​பட்​டுள்​ளது.

இதனைத் தொடர்ந்து அடை​யாறு ஆற்​றின் கரையோர மக்​களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை விடப்​பட்​டுள்​ளது. ஏரி​யில் இருந்து நீர் வெளி​யேற்​றப்​படு​வதை மாவட்ட கண்​காணிப்பு அலு​வலர் கந்​த​சாமி, ஆட்​சி​யர் கலைச்​செல்​வி, சட்​டப்​பேர​வை உறுப்​பினர்​ செல்​வப்​பெருந்​தகை ஆகியோர்​ பார்​வை​யிட்​டனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *