அதன் தொடா்ச்சியாக, அந்த கிரகத்தில் ஆழமான, மிகப் பரந்த பெருங்கடல் அமைந்துள்ளதாகவும், இதனால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் கேம்பிரிட்ஜ் ஆய்வுக் குழு 2023-ஆம் ஆண்டு கூறியது. இருந்தாலும், இது தொடா்பாக பல விஞ்ஞானிகள் சந்தேகம் எழுப்பினா்.இந்தச் சூழலில், கே2-18பி கிரகத்தில் டிமெத்தைல் சல்ஃபைடு (டிஎம்எஸ்), டிமெத்தைல் டிசல்ஃபைடு (டிஎம்டிஎஸ்) ஆகிய, உயிரினங்கள் இருந்தால் மட்டுமே உருவாகக் கூடிய இரு ரசாயனப் பொருள்கள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக அதே குழு தற்போது அறிவித்துள்ளது.பூமியின் கடலில் வாழும் உயிரினங்கள்தான் இந்த இரு ரசாயனப் பொருள்களை வெளிப்படுத்துகின்றன. எனவே, தற்போது கிடைத்துள்ள ஆதாரம், பூமிக்கு வெளியிலும் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்கு இதுவரை கிடைத்துள்ளதிலேயே மிகவும் உறுதியான ஆதாரம் என்று கேம்பிரிட்ஜ் ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.
பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?
