பூம்புகார் கடல் ஆய்வு முதல் ஆதிச்சநல்லூர் வரை: தமிழகத்தில் அடுத்தகட்ட வரலாற்று ஆய்வுகள் தீவிரம்!| The Central Government has granted approval for the commencement of the next phase of archaeological excavations

Spread the love

இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு விடுத்த நேரடி வேண்டுகோளில், பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பணிகளைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். முதல்வரின் இந்தத் தலையீட்டைத் தொடர்ந்து, மத்திய தொல்லியல் துறை தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்தில் பண்டைய துறைமுக நகரமாகத் திகழ்ந்த பூம்புகார் கடற்கரைப் பகுதியில், நீருக்கடியில் மறைந்துள்ள வரலாற்றுச் சான்றுகளைத் தேடும் ஆய்வுகளுக்கும் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

சென்னனூர் அகழ்வாராய்ச்சி

சென்னனூர் அகழ்வாராய்ச்சி

பூம்புகார் எனப்படும் காவேரிப்பூம்பட்டினத்தின் கடல்சார் வணிகத் தொடர்புகளைக் கண்டறியும் வகையில், கடந்த செப்டம்பர் 2025 முதல் அந்தப் பகுதிகளில் நீருக்கடியிலான ஆய்வுகள் (Underwater Survey) தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது நிலப்பரப்பில் எட்டு இடங்களில் ஆய்வு நடத்த அனுமதி கிடைத்துள்ளதால், தமிழகம் முழுவதும் வரலாற்றுத் தேடல் ஒரு புதிய வேகத்தை எட்டியுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது! அடுத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *