பெங்களூரு வாகன ஓட்டிகளே.. இது தெரியுமா?

Dinamani2fimport2f20212f72f12foriginal2fpolice Bikers Man.jpg
Spread the love

ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வரும் பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு அடுத்து பேரிடியாக வந்திருப்பது போக்குவரத்து விதி மீறலுக்கான கட்டண உயர்வு.

இந்தியாவில் மார்ச் 1 ஆம் தேதி முதல் போக்குவரத்து விதிமீறல்களுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பெங்களூரு மாநகரில் ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதால், அங்கு இந்த விதிமுறை மற்றும் கட்டண உயர்வு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது என்றால், ரூ.1000 என்பது ரூ.1,500 ஆக அல்ல, மாறாக பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

முன்பு குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐந்நூறு வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனி ரூ.10,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறைத் தண்டனையும், தொடர்ச்சியாக இதே குற்றத்தில் ஈடுபட்டால் ரூ.15 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுளள்து.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *