கையிருப்புகள் இருக்கின்றன
அவர்கள் குறைவாக எங்களுக்கு அனுப்புவது இல்லை. பொதுவாக பெட்ரோல் விற்பனையாளர்கள் 3 நாட்களுக்கு தேவையான பெட்ரோல்களை கையிருப்பு வைத்திருப்பார்கள்.
அந்தவகையில் பார்த்தால் எங்களிடம் பெட்ரோல், டீசல் கையிருப்புகள் இருக்கின்றன.
எவ்வளவு கேட்டாலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலை தருகின்றன. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது.

அச்சப்பட வேண்டாம்
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்று வதந்திகளைப் பரப்புகிறார்கள். LPG தட்டுப்பாடு வந்ததால் மக்கள் அச்சத்தில் அளவுக்கு அதிகமான பெட்ரோல், டீசலை வாங்குகின்றனர்.
ஆனால் அளவுக்கு அதிகமாக வாங்கினால் பெட்ரோல், டீசல் விரைவில் காலியாகி செயற்கை தட்டுபாடு ஏற்படும். கேன், பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வாங்க வேண்டாம். அது சட்டப்படி தவறு.
தேவைக்கு ஏற்றமாதிரி மட்டும் பெட்ரோல், டீசல் வாங்கினால் போதுமானது. பெட்ரோல் தட்டுபாடு வந்துவிட்டது என்று யாரும் அச்சப்பட வேண்டாம். அப்படி ஒரு சூழல் தற்போது இல்லை” என்று நிலவரத்தை நம்மிடம் விவரித்தார்.