“பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!” – மேடையில் ‘துரந்தர்’ பட பாடகி! |”I won’t sing until women feel safe here!” – ‘Dhuranthar’ singer on stage!

Spread the love

‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும் பின்னணி பாடகி ஜாஸ்மின் சாண்டல்ஸ், மேடையிலேயே பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பேசியிருக்கிறார்.

இந்த சம்பவத்தின் புகைப்படங்களும், காணொளிகளும் இணையத்தில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.

டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நேற்று ஜாஸ்மின் சாண்டல்ஸின் இசைக் கச்சேரி நடைபெற்றது.

மேடையில் அவர் பாடிக்கொண்டிருக்கும்போதே, இரு ஆண்கள் பெண்களைத் தொந்தரவு செய்வதை கவனித்த அவர், உடனடியாக பாடுவதை நிறுத்தி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர்களை அப்புறப்படுத்துமாறு கூறினார்.

மேடையில் அவர், “பாதுகாப்பு ஊழியர்களே, இந்த இரு நபர்களை உடனே அப்புறப்படுத்துங்கள். இவர்கள் பெண்களைத் தொல்லை செய்கிறார்கள். பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்” என்று திடமாகக் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *