பெண்கள் மீது கை வைத்தால் கை இருக்காது: பாஜக ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை ஆவேசம் | Tamilisai angry speech at BJP protest

Spread the love

சென்னை: ‘தமிழகத்​தில் பெண்​கள் மீது கை வைத்​தால் அவர்​களுக்கு கைஇருக்​காது’ என கோவை மாணவி பாலியல் சம்​பவத்தை கண்​டித்து பாஜக மகளிர் அணி நடத்​திய ஆர்ப்​பாட்​டத்​தில் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார்.

கோவை கல்​லூரி மாணவி பாலியல் வன்​கொடுமை​யைக் கண்​டித்து தமிழக பாஜக மகளிர் அணி சார்​பில் தமிழகம் முழு​வதும் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. சென்​னை​யில் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், மாநில துணைத் தலை​வர் குஷ்பு ஆகியோர் தலைமை தாங்​கினர்.

மாநில துணைத் தலை​வர் கரு.​நாக​ராஜன், மாநிலச் செய​லா​ளர்​கள் சதீஷ்கு​மார், சுமதி வெங்​கடேசன் உட்பட மாநில, மாவட்ட மகளிர் அணி நிர்​வாகி​கள் ஏராள​மானோர் கலந்து கொண்​டனர். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் தமிழிசை சவுந்​தர​ராஜன் கூறிய​தாவது: திமுக அரசு பெண்​களின் பாது

​காப்பை கேள்விக்​குறி​யாக்கி இருக்​கிறது. இதைப்​பற்றி கொஞ்​சம்​கூட கவலைப்​ப​டா​மல், முதல்​வர் ஸ்டா​லின் தேர்​தலில் எப்​படி வெற்றி பெறு​வது என கூட்​டம் நடத்திக் கொண்​டிருக்​கிறார்.

தமிழகத்​தில் இன்று இருக்​கும் சூழ்​நிலைக்கு நீங்​கள் யாரை​யும் சுட்​டுப்​பிடிக்க வேண்​டாம். இன்​னும் கொஞ்ச நாட்​களில் நாங்​கள் எல்​லோரும் கைகளில் துப்​பாக்கி வைத்​துக்​கொண்​டு, சுட வேண்​டிய சூழ்​நிலை​தான் உரு​வாகும். பெண்​கள் ஆயுதத்தை எடுக்​கவேண்​டிய காலம் தமிழகத்​தில் வந்​திருக்​கிறது. தமிழகத்​தில் காவலர்​கள்​தான் செய​லாற்​ற​வில்​லை. பெண்​கள் பாது​காப்​புக்​காக உரு​வாக்​கிய ‘காவலன் செயலி’​யா​வது செய​லாற்​றுகிறதா என சோதனை செய்​யப் போகிறோம். பெண் குழந்​தைகளைப் பெற்​று​விட்டு எல்​லோரும் சும்மா இருப்​பார்​களா? இனி தமிழகத்​தில் ஒரு பெண் மீது கை வைத்​தால், அவர்​களுக்கு கை இருக்​காது.இவ்​வாறு அவர் கூறி​னார்.

குஷ்பு கூறும்​போது, ‘பெண்​கள் எல்​லோரும் வெளியே சென்று வீட்​டுக்கு திரும்பி வரும்​வரை, வயிற்​றில் நெருப்பை கட்​டிக் கொண்டு இருக்​கிறோம். தமிழகத்​தில் திமுக ஆட்​சிக்கு வந்​த​பிறகு பெண்​களுக்​காக நடந்த நல்ல விஷ​யங்​கள் எதை​யா​வது சொல்ல முடி​யு​மா? திமுக ஆட்​சி​யில் ஒரு ஆண்​டில் 450 முதல் 470 வரை பாலியல் வழக்​கு​கள் பதிவு செய்​யப்​படு​கிறது” என்​றார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *