மந்து கோவில் மற்றும் தெய்வ வழிபாடு பற்றி…
“மந்தின் தெய்வம் `முன்போ தேக்சி அம்மன்”
நாங்கள் மகாபாரதத்தில் வரும் பஞ்சபாண்டவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் குலதெய்வமும் பஞ்சபாண்டவர்கள்தான். நாங்கள் ஒலி வடிவில் தெய்வ வழிபாடு செய்கிறோம்.”
பெரிய மந்து வரலாறு பற்றி…
“ஊட்டியில் மொத்தம் இரண்டு பெரிய மந்து கோயில்கள் உள்ளன.
அதில் எங்கள் தலைமை மந்து முத்துநாடு மந்து தான்.
எப்பநாட்டில் ஒரு மந்து இருக்கிறது. ஆனால் அது 25 அடி தான். தலைமை மந்துதான் 35 அடி. இதுதான் எங்களின் பூர்வீக மந்து.
தோட மக்கள் 15 ஊர்களில் வசிக்கின்றனர். அவர்களின் முதல் பூர்வீக மந்து என்றால் அது முத்தநாடு மந்து தான்.
நாங்கள் எல்லோரும் வருடத்திற்கு ஒருமுறை `மொற்பந்த்’ என்ற எங்கள் குலதெய்வ வழிபாட்டைச் செய்வோம். 15 ஊர்களிலும் இருந்து மக்கள் அன்று ஒரு நாள் கூடி அன்போடு விழாவை சிறப்பிப்போம்.
அதேபோல் தான் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை `முன்போ’ பண்டிகையையும் 15 ஊர் மக்களும் சேர்ந்து கூரை வேய விரதம் இருந்து பண்டிகையைக் கொண்டாடுவோம்.
எவ்வளவுதான் காலம் மாறினாலும்… பழைமை மாறாமல் எங்கள் கலாசாரத்தை மறவாமல் நாங்கள் எல்லோரும் ஒன்று கூடி விழாவைக் கொண்டாடுகிறோம்” என்றார்.