ஓவருக்கு 9 அல்லது 10 ரன்கள் எடுப்பது என்பது பெரிய விஷயமல்ல, பவுண்டரிகளும் எளிதாக வந்தன. ஆனால் விக்கெட்டுகளைத் தொடர்ந்து இழந்ததால் ஆட்டத்தின் வேகத்தை எங்களால் தக்கவைக்க முடியவில்லை.
ஸ்கோர் போர்டைப் பார்த்தாலே ஆட்டத்தின் தேவை என்ன என்பது தெரிந்துவிடும். இருப்பினும், இது தொடரின் ஆரம்பம்தான், தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு இன்னும் வலிமையாகத் திரும்புவோம்.

கடைசி ஓவரைப் பொறுத்தவரை, ஒரு பவுண்டரி அடித்தால் போதும் என்பதே எங்கள் திட்டமாக இருந்தது. துஷார் தேஷ்பாண்டே மிகச்சிறந்த யார்க்கர்களை வீசினார். ஆனால், அவர் லெந்த் தவறி வீசிய அந்த ஒரு பந்தை நான் சிக்ஸருக்கு அடித்திருக்க வேண்டும், அது முடியாமல் போனது வருத்தமே.
சுப்மன் கில் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவருக்கு லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது, அடுத்த போட்டிக்குள் அவர் குணமாகிவிடுவார் என்று நம்புகிறேன்,” என்று பேசியிருக்கிறார்.