‘பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்?’ – திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது விஜிலென்ஸ் FIR | Peravoorani Vigilance FIR against 7 people including DMK woman chairperson

Spread the love

இந்நிலையில் பேரூராட்சியில் நடைபெற்ற ஊழல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நீலகண்டன் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் மனு அளித்தார்.

மேலும் இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஆறு வார காலத்திற்குள் விசாரணை நடத்தி ஊழல் நடந்திருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், நீலகண்டனிடம் நடத்திய விசாரணையில் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களைக் கொடுத்தாகச் சொல்லப்படுகிறது. மேலும் பேரூராட்சியில் விசாரணை நடத்தி முறைகேடு நடந்திருப்பதை விஜிலென்ஸ் உறுதி செய்ததாகச் சொல்கிறார்கள்.

பேராவூரணி பேரூராட்சி தலைவரின் மாமனார் செல்வராஜ்

பேராவூரணி பேரூராட்சி தலைவரின் மாமனார் செல்வராஜ்
ம.அரவிந்த்

ஆனாலும் ஆளும் கட்சியினர் முறைகேடு புகாரில் சிக்கியிருப்பதால் மேல் மட்டத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள்.

இதைதொடர்ந்து மீண்டும் நீலகண்டன், லஞ்ச ஒழிப்பு துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் தவறு செய்திருக்கும் பட்சத்தில் நான்கு வாரத்திற்கு உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதைதொடர்ந்து மீண்டும் விசாரணையில் இறங்கிய லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார், திமுக சேர்மன் சாந்தி, அவரது கணவர் சேகர், மாமனார் செல்வராஜ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தியதாகச் சொல்கிறார்கள்.

இதையடுத்து கடந்த 11ம் தேதி செயல் அலுவலர் பழனிவேல், சேர்மன் சாந்தி, சேகர், செல்வராஜ் உள்ளிட்ட 7 பேர் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *