பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சர் சிவசங்கர் தகவல் | Minister Sivasankar says No intention to increase bus fares

1370415
Spread the love

அரியலூர்: அரசுப் பேருந்து கட்​ட​ணத்தை உயர்த்​தும் எண்​ணம் இல்லை என்று போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்கர் கூறி​னார். அரியலூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பேருந்து கட்ட​ணம் உயர்த்​தப்படும் என வதந்தி பரவுவது வழக்​க​மாக உள்​ளது. இதை ஒவ்​வொரு முறை​யும் மறுத்து வரு​கிறோம். ஏழை மக்​கள் மீது சுமையை ஏற்​றக்​கூ​டாது என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுரைவழங்கி இருக்​கிறார்.

எனவே, பேருந்து கட்​ட​ணத்தை உயர்த்​தும் எண்​ணம் இல்லை. அதி​முகவை முழு​வதும் ஆக்​கிரமித்​து, அந்த இடத்தை நிரப்​புவது பாஜக​வின் கனவு என்​று, அதி​முக​விலிருந்து விலகி திமுக​வில் இணைந்த முன்​னாள் எம்​.பி. அன்​வர் ராஜா கூறியிருக்​கிறார்.

திமுக​வின் வாக்​கு​களைப் பிரிக்​கலாம் என்ற எண்​ணத்​தோடு​தான் பல்​வேறு புதிய கட்​சிகளை, ஒவ்​வொரு தேர்​தலிலும் பாஜககளத்தில் இறக்​கு​வதை வழக்​க​மாக கொண்​டிருக்​கிறது. இப்​போதும் அந்த தந்​திரத்தை பாஜகவினர் கையில் எடுத்து இருக்கிறார்​கள். வரும் தேர்​தலில் இவற்றை முறியடித்து திமுக வெற்றி பெறும்.

பாஜக​வுடன் இனி கூட்​டணி கிடை​யாது என்று சொன்ன பழனி​சாமி​தான், அமித்​ஷாவுடன் மேடை​யில் அமர்ந்​திருக்​கும்​போது மவுனமாக இருந்​தார். இன்​னும் சில நாட்​கள் கழித்து என்ன பேசப்போகிறார் என்று தெரிய​வில்​லை? இவ்​வாறு அமைச்​சர்​ கூறி​னார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *