பேருந்து மோதி இளம்பெண் பலி!

Dinamani2fimport2f20202f82f142foriginal2fmurder.jpg
Spread the love

பேருந்து மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தெலங்கானாவில் உள்ள மாதாபூரில், 25 வயதான இளம்பெண் ஒருவர், பணிமுடிந்து, வெள்ளிக்கிழமை இரவில் வீடு திரும்பியுள்ளார்.

ஆனால், அவர் கோத்தகுடா பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, அரசுப் பேருந்து வருவதைக் கவனிக்கவில்லை. இருப்பினும், பேருந்து பக்கத்தில் வந்தநேரத்தில், விலகிச் செல்ல முயன்ற நேரத்திலும், அவர்மீது பேருந்து மோதியுள்ளது.

இவையனைத்தும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து, அவரது சிகிச்சைக்காக உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும், பலத்த காயமடைந்ததால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *