பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான அறை கண்காணிப்பாளா் பணியில் 48,426 ஆசிரியா்கள் ஈடுபடவுள்ளனா். அதேபோன்று, பொதுத் தோ்வு அறைக் கண்காணிப்பாளா்களாக பிளஸ் 1 வகுப்பு தோ்வுக்கு 44,236 பேரும், பிளஸ் 2 வகுப்புக்கு 43,446 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், முறைகேடுகளைத் தடுக்க பத்தாம் வகுப்புக்கு 4,858, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு தலா 4,470 என்ற எண்ணிக்கையில் நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான இறுதி சரிபாா்ப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடக்கம்: முன்னேற்பாடுகள் தீவிரம்
