`பொதுமக்களின் செல்போன்களில் என்னைக் குறித்து சர்வே எடுத்தற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை’ – ஜோஸ் சார்லஸ் | Jose Charles Martin has filed a complaint with Puducherry Cyber ​​Crime

Spread the love

இதற்கிடையில் இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக மாறி வைரலானது.

அடுத்தடுத்து அப்படியான புகார்கள் சைபர் கிரைம் போலீஸிடம் குவிந்ததால் பதற்றமான `லாட்டரி’ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அந்த சர்வேவுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

புதுச்சேரியில் எங்கள் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், எங்கள் மீது கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் ஆளும் கட்சி அல்லது எதிர்கட்சியினர்தான் இதை செய்திருக்கிறார்கள்.

அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகாரளித்திருக்கிறார்.

மேலும் தன்னை களங்கப்படுத்த முயற்சிப்பவர்கள் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஜோஸ் சார்லஸ் தரப்பு புகார்

ஜோஸ் சார்லஸ் தரப்பு புகார்

சில நாள்களுக்கு முன்பு எம்.எல்.ஏ ஜான்குமாரின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விதிகளை மீறி, ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் பேனர்களை வைத்து அன்னதானம் வழங்குவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் சபாநாயகரை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர், அவற்றை அகற்ற வேண்டும் என்று புகாரளித்தனர்.

அதையடுத்து எம்.எல்.ஏ ஜான்குமாரின் அலுவலகத்தில் இருந்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் பேனர்கள் அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *