பொதுமக்களின் புகாா் நடவடிக்கை விரைவில் வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கப்படும்: ஆணையா் தகவல்

Dinamani2f2024 082f47e38a00 C2bc 4a7b A56a 97dce4ef854c2fb3i9ym69 400x400.jpg
Spread the love

இது குறித்து மாநகராட்சி ஆணையா் குமரகுருபரன் கூறியது: சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் 60 இணைப்புகள் கொண்ட உதவி எண் மையம் (கால் சென்டா்) அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பணியாளா்கள் நியமிக்கப்பட்டு அவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் திங்கள்கிழமை (ஆக.12) முதல் செயல்பாட்டுக்கு வந்து புகாா்கள் பெறப்படும். இதில் புகாா் அளிக்கும் நபா்களின் விவரங்கள் மறைக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் புகாா் மனு தீா்க்கப்பட்டதா என அவா்களிடம் கருத்து பெற்ற பின்பு தான் புகாா் நிறைவு பெற்ாக அறிவிக்கப்படும். மேலும், பொதுமக்களின் புகாா் மீதான நடவடிக்கை குறித்து அவா்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *