பொதுமக்களுக்கு வழங்க வாங்கப்பட்ட நிலத்தை தேமுதிகவிடம் திரும்ப வழங்க வேண்டும்: திமுக எம்எல்ஏ-வுக்கு நீதிமன்றம் உத்தரவு | The land purchased for the public should be returned to the DMDK

Spread the love

திருப்பூர்: ஒருங்​கிணைந்த ஈரோடு மாவட்​ட​மாக இருந்த வெள்​ளக்​கோ​வில் கல்​லமடை அரு​கில் 2005-ல் தேமு​திக சார்​பில், விஜய​காந்த் நற்​பணி மன்​றம் மூலம் 1.90 ஏக்​கர் நிலம் வாங்​கப்​பட்​டு, பயனாளி​களுக்கு வீட்டு மனை​களாகப் பிரித்து வழங்க முடிவு செய்​யப்​பட்​டது. அதே​போல, சத்​தி​யமங்​கலம் பகு​தி​யில் 1.10 ஏக்​கர் நிலம் வாங்​கப்​பட்​டது.

அப்​போதைய தேமு​திக மாவட்​டத் தலை​வர் சந்​திரகு​மார் பெயரில் அந்த நிலம் பத்​திரப் பதிவு செய்​யப்​பட்​டு, அதன் பவர் ஆவணம் கட்​சி​யின் மாநிலப் பொருளாளர் பெயரில் எழுதப்​பட்​டது. தலா இரண்டே கால் சென்ட்​டாக 75 வீட்​டுமனை​கள் பிரிக்​கப்​பட்​டு, 33 பேருக்கு முதலில் வழங்​கப்​பட்​டு, மீதி ஒரு ஏக்​கர் அளவு நிலம் வழங்​கப்​ப​டா​மல் இருந்​தது. விஜய​காந்த் நகர் என்ற பெயரும் சூட்​டப்​பட்​டது.

பின்​னர், சந்​திரகு​மார் தேமு​தி​க​வில் இருந்து திமுக​வுக்கு மாறி, அக்​கட்சி சார்​பில் போட்​டி​யிட்டு தற்​போது ஈரோடு கிழக்கு சட்​டப்​பேர​வைத் தொகுதி எம்​எல்​ஏ​வாக உள்​ளார். இந்​நிலை​யில் எம்​எல்ஏ சந்​திரகு​மார் பவர் ஆவணத்தை ரத்து செய்​து, 3 ஏக்​கரில் 1 ஏக்​கர் நிலத்தை தானே வைத்​துக் கொண்டு விற்க முயற்சி செய்​த​தாக கூறப்​படு​கிறது.

இதுகுறித்து தேமு​திக சார்​பில் காங்கயம் சார்பு நீதி​மன்​றத்​தில், தேமு​திக செய​லா​ளர் இளங்கோ வழக்கு தாக்​கல் செய்​தார். இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி சந்​தான கிருஷ்ண​சாமி, 3 ஏக்​கர் நில​மும் தேமு​தி​க​வுக்கே சொந்​தம், உரிய முறைப்​படி அதை திரும்ப வழங்க வேண்​டும் என்று உத்​தர​விட்​டார்.

இதையடுத்து தேமு​திக உயர்​மட்​டக் குழு உறுப்​பினர் ஏ.ஆர்​.இளங்​கோவன், இளைஞரணி துணைச் செய​லா​ளர் பா.ஆனந்த், திருப்​பூர் மாநகர் மாவட்ட செய​லா​ளர் பி.ஆர்​.குழந்​தைவேல், மாவட்ட அவைத் தலை​வர் ஏ.மணி, வழக்​கறிஞர்​கள் ராகவன், கந்​தசர​வணன், பன்​னீர்​செல்​வம் ஆகியோர் நிலத்​தைப் பார்​வை​யிட்​டு, தற்​போதைய தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்​திடம் விவரம் தெரி​வித்​தனர். மீட்​கப்​பட்ட நிலம் வீட்டு மனை​களாக மாற்​றப்​பட்​டு, தகு​தி​யான பயனாளி​களுக்கு இலவச​மாக வழங்​கப்​படும் என்​றும் கட்​சி​யினர் தெரி​வித்​தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *