பொது இடங்களில் கொடிக் கம்பங்கள், கட்-அவுட்கள் அமைக்க தனி விதிமுறைகள்: நீதிமன்றம் யோசனை | Court suggests to separate rules for erecting flagpoles, cut-outs in public places

1372196
Spread the love

மதுரை: பொது இடங்​களில் கொடிக் கம்​பங்​கள், கட்​-அவுட்​கள் அமைக்க தனி விதி​முறை​கள் வகுக்க வேண்​டும் என்று உயர் நீதிமன்​றம் யோசனை தெரி​வித்​துள்​ளது. பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்​று​வது தொடர்​பாக மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்த வழக்​கில், பிற கட்​சிகள் இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​ய​லாம் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தெரி​வித்​தது.

இதையடுத்​து, அதி​முக, விசிக, மதி​முக, இந்​திய கம்​யூனிஸ்ட், தவெக, தமிழக வாழ்​வுரிமைக் கட்​சி, மனிதநேய மக்​கள் கட்சி மற்றும் பல்​வேறு அமைப்​பு​கள் சார்​பில் இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஆர்​.​விஜயகு​மார், சவுந்​தர் ஆகியோரது அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தன.

அ‌தி​முக, கம்​யூனிஸ்ட் உள்​ளிட்ட கட்​சிகள் சார்​பில், பொது இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள கொடிக் கம்​பங்​களை அகற்​றக்​கூடாது, பட்டா நிலங்​களில் கட்​சிக் கொடிக் கம்​பங்​கள் அமைக்க அனு​மதி வழங்க வேண்​டும் என வேண்​டு​கோள் வைக்​கப்​பட்​டது. அரசு தரப்​பில், “கொடிக் கம்​பங்​கள் அமைப்​பது தொடர்​பாக உரிய வழி​காட்டு நெறி​முறை​களை வகுக்க அரசு தயா​ராக உள்​ளது” என தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த விவ​காரத்தை பொது நலனுடன் அணுகு​கிறோம். எனினும், இதற்கு தனி வழி​காட்டு நெறி​முறை​களை அரசு வகுக்க வேண்​டும். அரசி​யல் கட்சி கொடிக் கம்​பங்​கள் போக்​கு​வரத்​துக்கு பாதிப்பு இல்​லாமல் அமைக்​கப்பட வேண்​டும்.

நடிகர்​கள், அரசி​யல் கட்​சித் தொண்​டர்​கள் 60 அடி உயரத்​துக்கு கட்​-அவுட் வைத்​து, அதற்கு பாலபிஷேகம் செய்​கின்​றனர். எனவே, கட்​-அவுட்​கள் அமைப்​ப​தற்​கும் உரிய விதி​முறை​களை உரு​வாக்க வேண்​டும். இந்த வழக்​கில் இடை​யீட்டு மனுக்​களை தாக்​கல் செய்​துள்ள கட்​சிகள், அமைப்​பு​கள் சார்​பில் பதில் மனு தாக்​கல் செய்ய வேண்​டும்.

அந்த பதில் மனுவை அரசு தரப்​புக்​கும் வழங்க வேண்​டும். பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​ப​டா​மல், பூங்கா போன்ற பொது இடங்களில் கொடிக் கம்​பங்​களுக்கு தனி இடம் ஒதுக்​கு​வதற்​​கான ​வாய்​ப்​பு குறித்​தும்​ அரசு தெரிவிக்​க வேண்​டும்​. வி​சா​ரணை ஆக. 13-க்​கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது. இவ்​​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​விட்​டனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *