விஜய்யின் படங்களில் எப்போதுமே இன்ட்ரோ பாடல்கள் முக்கியமானதாக இருக்கும். மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் ரசிகர்களுக்கு அந்தத் தொடக்கப் பாடல், கொண்டாட்டத்துடன் நடனமாட வைக்கும்.
அப்படி கொண்டாட்டத்தைக் கொடுக்கக் கூடியதாக அமைந்த விஜய்யின் இன்ட்ரோ பாடல்கள் ஏராளம். “போக்கிரி பொங்கல்’, ‘வாடா வாடா தோழா’, ‘ராமா ராமா’ என விஜய்யின் பல தொடக்கப் பாடல்களைக் கோரியோ செய்தவர், கோரியோகிராபர் அசோக் ராஜா.

சமீபத்தில், மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்றிருந்த ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கோரியோகிராபர்கள் பலரும் விஜய்யின் ஹிட் பாடல்களுக்கு ஒன்றிணைந்து பெர்ஃபார்ம் செய்திருந்தார்கள்.
கோரியோகிராபர் அசோக் ராஜாவும் அங்கு சென்று அதிரடியான நடன பெர்ஃபார்மென்ஸ் ஒன்றைக் கொடுத்திருந்தார். சென்னை திரும்பியிருக்கும் அவரைச் சந்தித்தோம்.
விஜய்யுடனான அவருடைய ஃப்ளாஷ்பேக் பக்கங்களைப் புரட்டித் தெரிந்துகொள்ள பல கேள்விகளைக் கேட்டோம்.