போக்குவரத்து தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது: சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் குற்றச்சாட்டு | CITU president Soundararajan alleges transport workers are being betrayed

1377092
Spread the love

விருதுநகர்: கடந்த ஆட்​சி​யில் போக்​கு​வரத்து தொழிலா​ளர்​களுக்கு இழைக்​கப்​பட்ட துரோகம், இந்த ஆட்​சி​யிலும் தொடர்​கிறது. கருணாநி​தி​யின் கொள்​கைகள் காற்​றில் பறக்​க​விடப்​பட்​டுள்ளன என்று சிஐடியு தலை​வர் சவுந்​தர​ராஜன் கூறி​னார். விருதுநகர் அரசுப் போக்​கு​வரத்​துக் கழகத்​தில் பணிபுரிந்த தொழிலா​ளர்​களுக்கு உரிய ஓய்​வூ​தி​யம், வாரிசு வேலை, ஓய்​வூ​தி​யப் பலன்​களை உடனடி​யாக வழங்​குதல் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி ஆக. 19-ம் தேதி முதல் காத்​திருப்பு போராட்​டம் நடை​பெற்று வரு​கிறது.

நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தில் பங்​கேற்ற சிஐடியு மாநிலத் தலை​வர் சவுந்​தர​ராஜன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தொழிலா​ளர்​களுக்கு கொடுக்​கவேண்​டிய பணத்தை 9 ஆண்​டு​களுக்​குப் பின்​னரும் கொடுக்க மனமில்​லாமல் இருப்​பது நியாயமற்​றது. ஓய்​வு​பெற்ற தொழிலா​ளர்​களுக்கு 9 ஆண்​டு​களாக பஞ்​சப்​படி வழங்​கப்​பட​வில்​லை.

ஓய்​வு​பெற்ற போக்​கு​வரத்து தொழிலா​ளர்​கள் வெறும் கையுடன் வீட்​டுக்கு அனுப்​பப்​படு​கின்​றனர். கடந்த ஆட்​சி​யில் தொடங்​கிய அவலம் இந்த ஆட்​சி​யிலும் தொடர்​கிறது. இதனால்​தான் போக்​கு​வரத்து தொழிலா​ளர்​கள் ஒப்​பந்​தத்​தில் சிஐடியு கையெழுத்​திட​வில்​லை. தொழிலா​ளர்​களுக்கு தரவேண்​டிய ரூ.500 கோடியை தர முடி​யாது எனக் கூறி​விட்​டார்​கள்.

அதி​கப்​படி​யான ஒப்​பந்த தொழிலா​ளர்​கள், எலெக்ட்​ரிக் பேருந்​துகள் மற்​றும் பணிமனை​களை தனி​யார்​மய​மாக்​கும் முடிவு​கள் எடுக்​கப்​படு​கின்​றன. தனி​யார்​மய​மாதல் காரண​மாக பொதுத்​துறை நிறு​வனங்​களில் இடஒதுக்​கீடு இல்​லாமல் சமூக நீதி அழிக்​கப்​படு​கிறது.

அரசை எதிர்த்து போராட்டம்:

திமுக மற்​றும் கருணாநி​தி​யின் கொள்​கைகள் காற்​றில் பறக்​க​விடப்​பட்​டுள்​ளன. அரசுப் போக்​கு​வரத்து தொழிலா​ளர்​களின் பிரச்​சினைக்கு தீர்​வு​காண​வில்லை என்​றால் அடுத்​த கட்​டத்​துக்கு போராட்​டத்தை கொண்​டு​செல்​வோம். மக்​கள் பிரச்​சினை​களுக்​காக திமுக அரசை எதிர்த்து கடுமை​யாக போராடு​வோம்.

இவ்​வாறு அவர் கூறி​னார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *