போக்குவரத்து நெரிசலில் திணறும் ஜிஎஸ்டி சாலை: நிரந்தர தீர்வு என்ன? | chrompet to tambaram heavy traffic issue in gst road in chennai

1343326.jpg
Spread the love

சென்னை தி.நகருக்கு அடுத்​த​படியாக தென் சென்னை​யில் குரோம்​பேட்டை முதல் தாம்​பரம் வரையிலான ஜிஎஸ்டி சாலை, வணிக நிறு​வனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. தேசிய நெடுஞ்​சாலைத்​ துறை​யின் கட்டுப்​பாட்​டின் கீழ் உள்ள இச்சாலை​யில் கடந்த 15 ஆண்டு​களில் வணிக நிறு​வனங்​களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பகுதி முழு​வதும் வணிக நிறு​வனங்கள் அதிகரித்​திருந்​தா​லும் பெரும்​பாலான கடைகளில் பார்க்​கிங் வசதி இல்லை.

இந்த வணிக நிறு​வனங்​களுக்கு கட்டிட அனுமதி கொடுக்​கும்​போதே, பார்க்​கிங் வசதி அமைக்​க​வும் அனுமதி வழங்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், பார்க்​கிங் வசதிக்கு ஒதுக்​கப்பட வேண்டிய பகுதி​களில் வணிக நிறு​வனங்​களால் கடைகள் அமைக்​கப்​பட்​டுள்ளன. இதனால் ஜிஎஸ்டி சாலை​யில் குரோம்​பேட்டை – பல்லா​வரம் வரையிலான 2 கி.மீ. தூரத்​தில் செயல்​படும் வணிக நிறு​வனங்​களுக்கு வரும் வாடிக்கை​யாளர்​கள், தங்களது வாகனங்களை சாலை​யிலேயே நிறுத்தி செல்​கின்​றனர்.

இதன் காரணமாக ‘பீக்​-ஹவர்’ நேரங்​களில் கடும் போக்கு​வரத்து நெரிசல் ஏற்பட்டு, அவசர கால வாகனங்கள் கூட செல்ல வழி கிடைப்​ப​தில்லை. தாம்​பரம் மாநக​ராட்சி நிர்​வாகம் சிஎம்​டிஏ, நிர்​வாகம் இணைந்து, பார்க்​கிங் வசதிக்கு அனுமதி பெற்றுள்ள இடங்​களில் கடைகள் அமைத்​துள்ள வணிக நிறு​வனங்​களுக்கு அபராதம் விதித்து, சம்பந்​தப்​பட்ட பகுதி​களில் பார்க்​கிங் வசதி அமைத்​தால் மட்டுமே இப்பிரச்​னைக்கு தீர்வு காண முடி​யும்.

இதுகுறித்து அறப்​போர் இயக்​கத்தை சேர்ந்த டேவிட் மனோகரன் கூறியது: குரோம்​பேட்டை ஜிஎஸ்டி சாலை, பல்லா​வரம்​-துரைப்​பாக்கம் ரேடியல் சாலைகளில் காலை, மாலை நேரங்​களில் கடுமையான போக்கு​வரத்து நெரிசல் ஏற்படு​கிறது.

குறிப்பாக உணவகங்​களில் பார்க்​கிங் வசதி இருந்​தும், அந்த பார்க்​கிங் இடத்தை தங்கள் வணிக நிறு​வனத்​துக்கு பயன்​படுத்​திக் கொண்டு, வாகனங்களை சாலை​யில் நிறுத்த சொல்​கின்​றனர். பார்க்​கிங் வசதி இல்லாத உணவகத்​துக்கு எவ்வாறு அனுமதி வழங்​கப்​பட்டது என்பதும் தெரிய​வில்லை. பெரும்​பாலான உணவகங்கள் பார்க்​கிங் வசதியே இல்லாமல் செயல்​படு​கிறது.

அனைத்து கட்டிடங்​களி​லும் பார்க்​கிங் வசதி இருப்​பதாக மாநக​ராட்சி வசம் ஆவணங்களை வழங்கி அனுமதி மட்டும் பெற்றுள்​ளனர். உணவகம், வர்த்தக நிறு​வனங்​களுக்​கு வரும் வாடிக்கை​யாளர்கள் சாலை​யிலேயே வாகனத்தை நிறுத்தி விடு​கின்​றனர். தாம்​பரம் மாநக​ராட்​சி​யும், சென்னை பெருநகர வளர்ச்சி குழு​ம​மும், போக்கு​வரத்து ​காவல்​துறை​யும் இணைந்து அனைத்து வணிக நிறு​வனங்​களி​லும் ஆய்வு செய்து வாகனம் நிறுத்த ஏற்​பாடு செய்​வதே இதற்கு நிரந்தர தீர்வாக அமை​யும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *