பெட்டி கடைகளில் கூட கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருள்கள் மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து விற்கப்படுகின்றன. திமுகவினர் ஆட்சியில் இருந்தால் போதும், தமிழ்நாட்டை கொள்ளையடிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணம். இன்றைக்கு ஊழல் இல்லாத துறைகளே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகள், வழக்குகள் பாய்கின்ற சூழலில் அமைச்சர்கள் சிறை செல்கிற பயத்தில் இருக்கின்றனர். திருச்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர், வேலை வாய்ப்பு, டிரான்ஸ்ஃபர் என அனைத்திலும் ஊழல் செய்துள்ளார். கிட்டத்தட்ட ரூ.2,500 கோடி ஊழலை அமலாக்கதுறை கண்டுபிடித்து முதலமைச்சருக்கு அனுப்பி வழக்கு பதிய சொன்னால் மெளனம் காக்கின்றனர். அந்த 2,500 கோடி ஊழல் பணம் எங்கு சென்றது என தெரியும்.

திருச்சியில் பிரதமர் மோடி எங்கும், எதிலும் ஊழல் நடக்கிறது என்றார். பல ஆயிரம் கோடி ஊழல் பணம் ஒரு குடும்பத்தை நோக்கி செல்கிறது. கைத்தடிகளாக, அடியாட்களாக திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ரூ.5,000 கொடுத்து கூலிப்படைகளை வைத்து கொலை செய்து விடலாம் என்கிற நிலையில், யாருடைய உயிருக்கும் பாதுகாப்பும் இல்லை. அந்த அளவிற்கு தமிழ்நாடு மோசமாகி விட்டது. 1,000 கொடுத்து பெண்களை சரிகட்டி விட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் வரும் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி இருந்தால் தான் தலை நிமிர முடியும் என நினைக்கிறார்கள்.