சென்னை: போதைப் பொருட்கள் பயன்பாட்டை எதிர்த்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் இருந்து மதுரை வரை ஜன. 2-ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம் தொடங்குகிறார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சிக்கு எதிராக நவ.11-ல் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதிமுகபெருமளவில் பங்கேற்கும். தமிழகத்தில் போதைப் பொருளுக்கு எதிராக ஜன.2-ம்தேதி திருச்சியில் இருந்து நடைபயணமாக புறப்பட்டு மணப்பாறை, திண்டுக்கல் வழியாக ஜன.12-ம் தேதி மதுரையை அடைந்து எங்களது பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.