போதைப் பொருள் வழக்கு தொடர்பாக விசாரணை: அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடிகர் கிருஷ்ணா ஆஜர் | Actor Krishna appears at Enforcement Directorate office for Investigation

1381485
Spread the love

சென்னை: ​போதைப் பொருள் வழக்​கில் சிக்​கிய நடிகர் கிருஷ்ணா அமலாக்​கத் துறை அலு​வல​கத்​தில் விசா​ரணைக்கு ஆஜரா​னார். போதைப் பொருள் வழக்​கில் நடிகர்​கள் ஸ்ரீகாந்த் மற்​றும் கிருஷ்ணா உள்​ளிட்ட 22-க்​கும் மேற்​பட்​டோரை போலீ​ஸார் கைது செய்தனர். மேலும், பல்​வேறு வகையி​லான போதைப் பொருட்​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டன. சிறை​யில் அடைக்​கப்​பட்ட நடிகர்​கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோ​ருக்கு நீதி​மன்​றம் நிபந்​தனை ஜாமீன் வழங்​கியது.

மேலும், இதில் சட்ட விரோத பணப் பரிவர்த்​தனை நடந்​திருப்​பது தெரிய​வந்​த​தால், அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நடிகர்​கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்​ளிடோர் மீது சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடுப்பு சட்​டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்​து, விசா​ரணை​யைத் தொடங்​கினர். அந்த வகை​யில், நடிகர் ஸ்ரீகாந்த் அக்​டோபர் 28-ம் தேதி​யும், நடிகர் கிருஷ்ணா 29-ம் தேதி​யும் நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அமலாக்​கத் துறை அலு​வல​கத்​தில் ஆஜராகு​மாறு அதி​காரி​கள் சம்​மன் அனுப்பி இருந்​தனர்.

ஆனால், நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜராக​வில்​லை. வேறொரு நாளில் ஆஜராக வாய்ப்பு வழங்க வேண்​டும் என்று ஸ்ரீகாந்த் சார்​பில் அமலாக்​கத் துறை​யிடம் கோரிக்கை வைக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், நடிகர் கிருஷ்ணா நேற்று நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அலு​வல​கத்​தில் ஆஜரா​னார்.

அப்​போது அவரிடம், “நீங்​கள் போதைப் பொருள் பயன்​படுத்​தி​யது உண்மை தானா? யாரிடம் இருந்​தெல்​லாம் வாங்​கினீர்​கள்? யாருக்​கெல்​லாம் கைமாற்​றினீர்​கள்? இதற்​காக எவ்​வளவு தொகை கைமாறியது? கைமாறிய தொகையை என்ன செய்​தீர்​கள்” என்பன உள்​ளிட்ட பல்​வேறு கேள்வி​களை எழுப்​பினர்.

அதற்கு அவர் அளித்த பதில்​களை எழுத்​துப் பூர்​வ​மாக​வும், வீடியோ​வாக​வும் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் பதிவு செய்து கொண்​டனர். பின்​னர், தேவைப்​பட்​டால் மீண்​டும் விசா​ரணைக்கு அழைப்​போம் என்று கூறி அவரை அனுப்பி வைத்​தனர். இந்த விசா​ரணை நேற்று காலை முதல் இரவு வரை நீடித்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *