கேரளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள வாலாஞ்சேரியில் போதைப் பொருள்கள் பயன்படுத்தும் பலரைக் காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
பாலியல் தொழிலாளர்கள், போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் ஆகியோருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு சோதனை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தால் அவ்வப்போது நடத்தப்படுகின்றது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களுக்கு சோதனை நடத்தியதில் 3 வடமாநில தொழிலாளர்கள் உள்பட 9 பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.