
“எனக்குமே அந்தக்காரணம் தெரியலை. போயஸ் கார்டன் வீடு கோர்ட் மூலமா எனக்கு வந்த புதுசுல, வீட்டைக் கேட்டாங்க. அவருடைய தூதுவரா சிலர் வந்து பேசினாங்க. எனக்கு என் அத்தையின் நினைவா இருக்கணும்னு மறுத்துட்டேன். அந்தக் கடுப்பு இருக்கலாம்னு நினைக்கேன்.
ஆனா நான் யாரையும் எதிரியா பார்க்கலை. இந்த பிறந்த நாளுக்கும் இ.பி.எஸ், ஒ.பி.எஸ் உள்ளிட்ட எல்லாரையுமேதான் கூப்பிட்டேன். ஒ.பி.எஸ் வரமுடியாட்டியும் ரெஸ்பான்ஸ் பண்ணுறார். இ.பி.எஸ் தரப்பு வழக்கம் போல நம்மை கண்டுக்கறதில்ல. இந்த வீட்டு வாசல்ல அம்மா கார் டயருக்கு வணக்கம் வச்சவங்கதானே, இன்னைக்கு இந்த வீட்டுக்கு வர்றதுக்கு என்ன? ஏன் வர மாட்டேங்கிறாங்கனு அவங்ககிட்டதான் நீங்க கேக்கணும்.”