போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க அரசு அதிரடி நடவடிக்கை!| India invokes emergency powers, orders refiners to boost LPG output

Spread the love

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

மத்திய கிழக்கு போர் சூழலால், இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க, எல்பிஜி (LPG) உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்

ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்

எல்பிஜி உற்பத்திக்குத் தேவையான புரொப்பைன், பியூட்டேன் வாயுக்களை பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களுக்கு கொடுக்கவும் தடை விதித்திருக்கிறது.

சுத்திகரிப்பு நிலையங்கள் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கவும், எரிவாயுவை அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் எல்பிஜி தேவையில், சுமார் 90% மத்திய கிழக்கு நாடுகளே பூர்த்தி செய்துவந்த நிலையில், அது தற்போது தடைபட்டுள்ளதால் மத்திய அரசு அவசரக்கால உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *