போலி வணிகர்களை தடுக்க கள ஆய்வு நடத்த அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவு | Minister P Moorthy orders field survey to prevent fake traders

1370780
Spread the love

சென்னை: ​போலி வணி​கர்​களைத் தடுக்க கள ஆய்வு செய்​வது அவசி​யம் என்று வணி​கவரித் துறை ஆய்​வுக் கூட்​டத்​தில் அமைச்சர் பி.மூர்த்தி அறி​வுறுத்​தி​னார். சென்னை நந்​தனம் ஒருங்​கிணைந்த வணி​கவரி மற்​றும் பதிவுத்​துறை வளாக கூட்ட அரங்கில், நடப்​பாண்டு ஜூன் மாதம் வரையி​லான அனைத்து வணி​கவரி இணை ஆணை​யர்​களின் பணித்​திறன் ஆய்​வுக் கூட்​டம் நடை​பெற்​றது.

இதில் அமைச்​சர் பி.மூர்த்தி பேசி​ய​தாவது: புதி​தாக ஜிஎஸ்டி வரி​யில் இணைய விண்​ணப்​பிக்​கும் வணி​கர்​களின் ஆவணங்​கள் சரியாக உள்​ளதா என்​பதை சரி​பார்ப்​பதுடன், அவர்​கள் உண்​மை​யாக தொழில் புரி​கிறார்​களா என்​ப​தை​யும் கள ஆய்வு செய்ய வேண்​டும். இதன் மூலம் போலி வணி​கர்​களைத் தடுக்க முடி​யும்.

கள ஆய்​வுக்குச் செல்​லும்​போது ரூ.40 லட்​சத்​துக்​கும் மேல் தொழில் செய்​யும், ஜிஎஸ்டி தொடர்​பான விழிப்​புணர்வு இல்​லாத வணிகர்களுக்​கு, அவர்​களை ஜிஎஸ்டி வரம்​புக்​குள் இணை​யு​மாறு அறி​வுறுத்த வேண்​டும். அரசுக்கு கூடு​தல் வரு​வாய் ஈட்​டித்​தரும் வகை​யில், அனை​வரும் கவன​மாக பணி​யாற்ற வேண்​டும். இவ்​வாறு அமைச்​சர் பேசி​னார்.

தமிழ்​நாடு வணி​கர் நல வாரி​யம் சார்​பில், சேலம் கோட்​டம் ராசிபுரத்​தைச் சேர்ந்த மறைந்த வணி​கர் ராம​சாமி குடும்​பத்​தைச் சேர்ந்த பழனி​யம்​மாள், ஈரோடு பெரிய அக்​ரஹாரத்​தைச் சேர்ந்த வணி​கர் தி.சி.சு​யம்​புலிங்க முத்து குடும்​பத்​தைச் சேர்ந்த ஐஸ்வர்யா, முகமது நாசர் அலி ஷேக்​மைதீன் குடும்​பத்​தைச் சேர்ந்த ஜீலைகா மஸ்​னூனா ஆகியோ​ருக்கு குடும்ப நல நிதி உதவித் தொகை​யாக தலா ரூ.3 லட்​சத்​துக்​கான காசோலைகளை அமைச்​சர் வழங்​கி​னார்.

இந்த நிகழ்​வில், வணி​கவரி மற்​றும் பதிவுத் துறைச் செயலர் ஷில்பா பிர​பாகர் சதீஷ், வணி​கவரி ஆணை​யர் எஸ்​.​நாக​ராஜன், இணை ஆணை​யர் மொ.​நா.பூங்​கொடி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *