*நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பயணம்.
*அம்மா இல்லம் திட்டத்தின் மூலம் கிராமம் நகர்ப்புறங்களில் குடியிருக்க வீடு இல்லாதவர்கள் அரசே நிலம் வாங்கி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
*ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலினத்தவர்களில் மகன், மகள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கையில் வீடு கட்டி கொடுக்கப்படும்.
*நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நூற்றைம்பது நாட்களாக விரிவுபடுத்தப்படும்.
*5 லட்சம் மகளிருக்கு 25000 ரூபாய் மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
எம்.ஜி.ஆரின் 109 வது பிறந்தநாளான இன்று அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.