மகளிர் இட ஒதுக்கீடு: வட மாநிலங்களின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கிறதா தொகுதி மறுசீரமைப்பு?| Women’s Reservation: Does Delimitation Pave the Way for the Dominance of Northern States?

Spread the love

மக்கள் தொகை அடிப்படையில் இடங்களை உயர்த்தும் போது வட மாநிலங்களில், உதாரணமாக உத்தரப்பிரதேசத்தின் 80 நாடாளுமன்றத் தொகுதி எண்ணிக்கை 120 என அதிகரிக்கும். மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அது இன்னும் கணிசமாக உயரும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களிலோ நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உயரும். உதாரணமாக தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகள் 39-லிருந்து 59-ஆக உயரும்.

இதனால், நாடாளுமன்றத்தில் வட மாநிலங்களின் ஆதிக்கம் ஓங்கும். தென் மாநிலங்களின் குரல் நசுக்கப்படும். அதேநேரம் பா.ஜ.க வட மாநிலங்களில் பலமாக இருப்பதால், இது அவர்களுக்குச் சாதகமாக முடியும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.

பிரியாங்கா காந்தி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ்

பிரியாங்கா காந்தி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடங்களை 2029 தேர்தலுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற அவசரத்தின் பின்னணியில் ஒரு மிகப்பெரிய அரசியல் கணக்கும் உள்ளது. பா.ஜ.க பார்வையில், வட மாநிலங்களில் மட்டும் கவனம் செலுத்தி, அதிக இடங்களை வென்றாலே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுவிட முடியும் என்ற நிலை உள்ளது. அதனால்தான், தற்போதைய 543 இடங்களுக்குள்ளேயே இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல், தொகுதிகளை மறுசீரமைப்பு செய்து மொத்த இடங்களை உயர்த்த பா.ஜ.க திட்டமிடுகிறது.

இதன் விளைவாக, தென்னிந்திய மாநிலங்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமலேயே, வட மாநில வெற்றிகளை மட்டும் வைத்துக்கொண்டு மத்தியில் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *