மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் – இந்திய அரசியல் களத்தில் இப்போதைய தலைப்பு செய்தி.
2008-ம் ஆண்டு முதல், இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தை “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்’ என்று கூறுவதை விட, ‘100 நாள் வேலை திட்டம்’ என்றால் தான் அனைவருக்கும் பரிச்சயம்.
இந்தத் திட்டம் பல கிராமப்புறவாசிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தது… இருந்து வருகிறது.

> `மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்கிற பெயர் ‘வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்டம்’ என்று மாற்றப்பட உள்ளது.
> இந்தத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை என்பது 125 வேலையாக உயர்த்தப்பட இருக்கிறது.
> இப்போதிருக்கும் திட்டத்தின் படி, இந்தத் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மத்திய அரசே முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ளும்.