மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவரிடம் ஆனந்த் கர்ஜே என்பவர் உதவியாளராக இருக்கிறார். இவரது மனைவி கௌரி. இவர் மும்பையில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் திருமணம் நடைபெற்றது.
கௌரியின் சொந்த ஊர் பீட் மாவட்டம் ஆகும். இவர்கள் மும்பை ஒர்லி பகுதியில் வசித்து வந்தனர். திடீரென கௌரி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கௌரியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கௌரியின் தந்தை அசோக் போலீஸில் கொடுத்துள்ள புகாரில்,
“எனது மகளை ஆனந்தும், அவரது பெற்றோரும், சகோதரரும், சகோதரியும் சேர்ந்து வீட்டு வேலை செய்வது தொடர்பாக அடிக்கடி சித்திரவதை மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அவர்கள் வேறு வீட்டிற்கு மாறியுள்ளனர். அந்நேரம் பொருட்களை மாற்றும் போது கர்ப்ப பரிசோதனை அறிக்கை ஒன்று கௌரியிடம் கிடைத்தது.
அது கிரண் என்பவரின் கர்ப்பப் பரிசோதனை அறிக்கையாகும். அதில் ஆனந்த் – கிரண் மனைவி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.