மகாராஷ்டிரா: தேர்தலில் போட்டியிட தடையாக இருந்த 6 வயது மகளை கொன்ற கொடூர தந்தை – என்ன நடந்தது? | A father in Maharashtra killed his 6-year-old daughter

Spread the love

மகாராஷ்டிராவில் வரும் 5-ம் தேதி பஞ்சாயத்து மற்றும் ஜில்லா பரிஷத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட வேண்டியிட விரும்புபவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் மாவட்டத்தில், அண்டை மாநிலமான தெலங்கானாவின் யெடபல்லி என்ற இடத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் 6 வயது பெண் குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை மீட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குழந்தை யார் என்பது குறித்து தெரிந்து கொள்ள குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.

அதனை பார்த்த மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவர் குழந்தை யார் என்பதை அடையாளம் காட்டினார். குழந்தையின் பெயர் பிராச்சி என்று தெரிய வந்தது. இதையடுத்து நாண்டெட் மாவட்டத்தில் உள்ள குரேர் என்ற கிராமத்தை சேர்ந்த அக்குழந்தையின் தந்தை பாண்டுரங்கை பிடித்துச்சென்று விசாரித்தனர்.

விசாரணையில் போலீஸாரின் விசாரணையை திசை திருப்பும் வகையில் பாண்டுரங்க் தகவல்களை கொடுத்தார். ஆனால் அவரது வாக்குமூலம் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

தேர்தலில் போட்டியிட மகள் கொலை

இந்த விசாரணையில் பாண்டுரங்க் தனது 6 வயது மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சலூன் கடை நடத்தி வரும் பாண்டுரங்க் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட பாண்டுரங்க் திட்டமிட்டார். ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் பாண்டுரங்கிற்கு ஒரு மகன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன. இதில் மகள்கள் இரண்டு பேரும் இரட்டை குழந்தைகள் ஆவர். இது குறித்து பாண்டுரங்க் தற்போது பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ராமச்சந்திர ஷிண்டேயிடம் கலந்து ஆலோசித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *