மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு

Dinamani2f2025 02 262fe73c21nd2fani 20250226230339.jpg
Spread the love

கோயம்புத்தூர்: மகா சிவராத்திரி ஜாதி, மதம், பாலின பாகுபாடு மற்றும் புவியியல் தடைகளைத் தாண்டி உலகளாவிய பண்டிகையாக பரிணமித்துள்ளது என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா புதன்கிழமை மாலை 6 மணியளவில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சா் அமித் ஷா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.

மகா சிவராத்திரி ஜாதி, மதம், பாலின பாகுபாடு மற்றும் புவியியல் தடைகளைத் தாண்டி உலகளாவிய பண்டிகையாக பரிணமித்துள்ளது என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

அதிகமான மக்கள் பௌதீக உலகத்திற்கு அப்பால் ஆழமான, ஆன்மீக அனுபவங்களைத் தேடும்போது, ​​சிவனின் அருளைப் பெற காத்திருப்பவர்கள் தங்கள் ஆழ் மனதை விரைவுபடுத்தவும், ஆழ்ந்த மாற்றத்தை அனுபவிக்கவும் மகா சிவராத்திரி ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

“பல ஆண்டுகளாக, மகா சிவராத்திரி ஜாதி, மதம், பாலின பாகுபாடு மற்றும் புவியியல் தடைகளைத் தாண்டி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது, ஏனெனில் அதிகமான மனிதர்களின் உடல் புலன்களுக்கு அப்பால் வாழ்க்கையின் ஆழமான அனுபவத்தைத் தேடத் தொடங்கியுள்ளனர். சிவனின் அருளை பெற விரும்புபவர்களுக்கும், அதைப் பெறக் கிடைக்கக்கூடியவர்களுக்கும், இந்த இரவு உள்ளிருந்து ஒளி பெறுவதற்கான பயணத்தை துரிதப்படுத்த முடியும்,” என்று சத்குரு கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *