சமீபத்தில் ஆண்டிபட்டி எம்.எம்.ஏ மகாராஜனும், தங்க தமிழ்ச்செல்வனும் மேடையிலேயே ஒருமையில் பேசி சண்டை போட்டுக்கொண்ட சம்பவங்களை எல்லாம் பார்த்திருப்பீர்கள். மேடையிலேயே இந்த நிலை என்றால் திரைமறைவில் நடப்பதையெல்லாம் தனியாகச் சொல்லவேண்டிய தேவையில்லை.
ஏற்கனவே மாவட்டச் செயலாளராக இருந்தும் கட்சி நிர்வாகிகளுடன் இணக்கமில்லாத சூழலில் தத்தளிக்கும் தமிழ்ச்செல்வனுக்கு ஓர் பெரிய பவர் செண்டர் அவர் பகுதியிலிருந்து கட்சிக்குள் புதிதாக வந்திருப்பதைக் கொஞ்சமும் ரசிக்கவில்லை.
ஓ.பி.எஸ்-யை தாண்டி அவரது இரண்டு மகன்களின் தலையீட்டையும் கூடுதலாகச் சமாளிக்கவேண்டிய நிலையம் இருக்கிறது. இந்த நிலையில் தான் வரும் தேர்தலில் ஓ.பி.எஸ்-காக இருவரும் ஒன்றாக இணைந்து வேலைபார்க்க வேண்டிய நிலை ஏற்படும்.
வெவ்வேறு துருவங்களாக இருந்த இவர்கள் ஒரே கோட்டில் இணைந்து பயணிப்பது கொஞ்சம் சிரமம் தான். அதிலும் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் அந்த இணக்கம் அவ்வளவு எளிதாக வந்துவிடாது. அதிமுகவிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்திருப்பதும், அவருக்கும் அவரது மகன் உட்பட ஆதரவாளர்களுக்குப் பதவி, சீட் வழங்கப் பேச்சுவார்த்தை நடைபெறுவது ஓ.பி.எஸ்-க்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்திருப்பது தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக தேனி வடக்கு மாவட்டச் செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வனுக்கு கடும் மன உளைச்சலையே கொடுத்திருக்கிறது. கண்டிப்பாக வரும் தேர்தலில் பல கடமுடா காட்சிகளைத் தேனிக்குள் பார்க்கலாம்” என்றார்கள் விரிவாக.