மசோதாக்களை ஆளுநர் தாமதப்படுத்தவில்லை: அரசியலமைப்பு சட்டப்படி செயல்படுவதாக ராஜ்பவன் விளக்கம் | Governor did not delay bills: Raj Bhavan

Spread the love

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் கடந்த 4 ஆண்​டு​களில் நிறைவேற்றி அனுப்​பப்​பட்ட 211 மசோ​தாக்​களில் 170 மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளித்​துள்​ள​தாக​வும், 27 மசோ​தாக்​கள் குடியரசுத் தலை​வர் ஒப்​புதலுக்கு அனுப்​பி​யுள்​ள​தாக​வும் ஆளுநர் மாளிகை விளக்​கம் அளித்​துள்​ளது.

சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தாமதப்​படுத்​து​வ​தாக பல்​வேறு தரப்​பினரும் குற்​றம்​சாட்டி வரும் நிலை​யில், இதுபற்றி ஆளுநர் மாளிகை வெளி​யிட்​டுள்ள விளக்​கம்: சட்​டப்​பேர​வை​யால் நிறைவேற்​றப் ​பட்ட மசோதாக்களுக்கு ஒப்​புதல் அளிப்​ப​தில் ஆளுநர் தாமதம் செய்​வ​தாக​வும், அவரது நடவடிக்கைகள் தமிழக மக்களின் நலனுக்கு எதி​ரானவை என்​றும் உண்​மைக்கு புறம்​பான குற்​றச்​சாட்​டு​கள்பொது வெளி​யில் வைக்​கப்​படு​கின்​றன.

கடந்த அக்​.31 தேதி வரை பெறப்​பட்டமொத்த மசோதாக்​களின் விவரங்​கள்​படி, 81 சதவீத மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளித்துள்ளார். இவற்​றில் 95 சதவீத மசோதாக்​களுக்கு 3 மாதங்​களுக்​குள் ஒப்​புதல் தரப்​பட்​டுள்​ளது. கடந்த மாதம் கடைசி வாரத்​தில் பெறப்​பட்​ட மசோதாக்கள் தற்​போது ஆளுநரின் பரிசீலனை​யில் உள்​ளன.

2021 செப்​.18 முதல், 2025 அக்​.31 வரை 211 மசோதாக்கள் பெறப்​பட்​டுள்​ளன. இதில் 170-க்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது. குடியரசுத் தலை​வரின் பரிசீலனைக்கு அனுப்​பப்​பட்​டுள்ள 27 மசோதாக்களில் 16 மாநில அரசின் கோரிக்கை அடிப்​படை​யில் அனுப்​பப்​பட்​டுள்​ளன. 4 மசோதாக்​கள் உரிய தகவல்​களு​டன் திருப்பி அனுப்​பப்​பட்​டுள்​ளன. இரு மசோதாக்களை அரசே திரும்ப பெற்​றுள்​ளது.

மேலும், சட்​டப்​பேர​வைக்கு திருப்​பிஅனுப்​பப்​பட்ட மசோதாக்கள், பேர​வையில் மீண்​டும் நிறைவேற்றி அனுப்​பப் ​பட்​ட​போது அவற்​றுக்கு ஒப்​புதல் அளிக்

​கப்​பட்​டுள்​ளது. மேலும், 10 மசோதாக்​கள் ஆளுந​ரால் நிறுத்தி வைக்கப்​பட்​டு, அரசுக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. இவை சட்​டப்​பேர​வை​யால் மீண்​டும் நிறைவேற்​றப்​பட்டு ஒப்​புதலுக்கு அனுப்​பப்​பட்​டன. அவை நாடாளு​மன்ற சட்​டத்​தின்​கீழ் இயற்​றப்​பட்ட பல்​கலைக்​கழக மானியக் குழு​வின் (யுஜிசி) விதி

​களுக்கு முரணாக இருந்​த​தா​லும், அவைமாநில சட்​டப்​பேர​வை​யின் வரம்​புக்கு அப்​பாற்​பட்​ட​தாக கருதப்​பட்​ட​தா​லும், ஆளுநர் அவற்றை குடியரசுத் தலை​வரின் பரிசீலனைக்கு அனுப்​பி​னார்.

ஆளுநர், சட்​டத்​தின் ஆட்​சியை நிலைநிறுத்​த​வும், தமிழக மக்​களின் நலன்​களை பாது​காக்​க​வும் ஒவ்​வொரு மசோ​தாவை​யும் உரிய கவனத்​துடன் ஆய்வு செய்​துள்​ளார். இந்​திய அரசி​யலமைப்​பில் கூறப்​பட்​டுள்ள கடமை​களைப் பின்​பற்​றி, மாநில மக்​களின் நலன் காப்​ப​தி​லும் உண்​மை​யாக​வும், வெளிப்​படைத் தன்​மை​யுட​னும் ஆளுநர் செயல்​பட்டுவரு​கிறார். அரசி​யல் விருப்பு வெறுப்​பு​களுக்கு அப்​பாற்​பட்டு அனைத்​துச் சட்​டங்​களும் அரசி​யலமைப்​புக்கு உட்​பட்டு நிறைவேற்​றப்​படு​வதை உறுதி செய்து வரு​கிறார்.

ஆளுநர், தமிழக மக்​கள் மீது மிகுந்த மதிப்​பும், மரி​யாதை​யும் கொண்​டுள்​ளார். தமிழர்​ பாரம்பரியம், கலை, இலக்கியத்தை முன்னிலைப்படுத்தும் ஆன்மிக, கலாச்சார, மொழிசார்ந்த முன்னெடுப்புகளுக்கு ஆதரவளித்து வருகிறார். ஆளுநர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு தமி

ழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *