மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்கு பத்திய உணவு அறிவுறுத்தப்படுவது ஏன்? | Why is a restricted diet (pathyam) recommended for those affected by jaundice?

Spread the love

மஞ்சள் காமாலை என்பது உறுதிசெய்யப்பட்டால், சித்த மருத்துவர்கள், பத்திய உணவுகளைக் கட்டாயம் வலியுறுத்துவார்கள். கல்லீரல் என்பது உடலின் மெட்டபாலிசம் மற்றும் நச்சு நீக்கத்திற்கு (Detox) மிக முக்கியமான உறுப்பு.

பசி, செரிமானம், கழிவு வெளியேற்றம் என எல்லாவிதமான ஹார்மோன் தொடர்பான செயல்பாடுகளுக்கும் கல்லீரல்தான் பிரதானம். கல்லீரல் அழுத்தத்தில் இருக்கும்போது அதற்கு வேலைப்பளுவை அதிகரிக்கும்படியான கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகள், அதிக காரம், உப்பு மற்றும் சர்க்கரை, அசைவ உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், விருந்து சாப்பாடு போன்றவற்றைச் சாப்பிடக்கூடாது. 

எந்தக் காரணத்தால் மஞ்சள் காமாலை வந்திருந்தாலும் அதிலிருந்து குணமாகி, கல்லீரல் இயல்புநிலைக்குத் திரும்பும்வரை, குறைந்தது 2-3 வாரங்களுக்காவது பத்திய உணவுகளைப் பின்பற்ற அறிவுறுத்துவோம்.

அதனால்தான் மஞ்சள் காமாலை பாதித்தால், எளிதில் செரிமானமாகும் இட்லி, இடியாப்பம், ஆப்பம், கல் தோசை, புளிப்பு ஏறாத உணவுகள், புழுங்கல் அரிசி கஞ்சி அல்லது பாசிப்பருப்பு சேர்த்துக் குழைய வேகவைத்த கிச்சடி (எண்ணெய் இல்லாமல்), காரம் மற்றும் உப்பு குறைவாக வீட்டிலேயே செய்த காய்கறி சூப், புளிப்பில்லாத மோர் சாதம் மற்றும் பருப்புத் தண்ணீர் ரசம் போன்றவை சிறந்தவை.

கீழாநெல்லி:  சாறாக இருந்தால் 30 மில்லி அல்லது அரைத்த விழுதாக இருந்தால் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து காலை வெறும் வயிற்றில் உப்பில்லாத மோரில் கலந்து 3 முதல் 5 நாள்கள் குடிக்க வேண்டும்.

கீழாநெல்லி: சாறாக இருந்தால் 30 மில்லி அல்லது அரைத்த விழுதாக இருந்தால் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து காலை வெறும் வயிற்றில் உப்பில்லாத மோரில் கலந்து 3 முதல் 5 நாள்கள் குடிக்க வேண்டும்.

வழக்கமாக நம் உணவில் 8 கிராமுக்கு மேல் உப்பு இருக்கும். மஞ்சள் காமாலை பாதித்தவர்கள், ஒரு நாளைக்கு 2 கிராம் உப்பு மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், மருத்துவர் அறிவுறுத்தினால் ஒழிய உப்பை முழுமையாகத் தவிர்க்கவும் கூடாது. நிறைய தண்ணீர் குடித்து, சிறுநீரை வெளியேற்றும்போது, அதிகப்படியான பிலிருபின் வெளியேறி, சிறுநீரின் நிறம் இயல்பாக மாறும். வெளிறிய நிறத்தில் வெளியேறிக் கொண்டிருந்த மலமும் இயல்பாக மாறும்.

உணவுமுறையோடு சேர்த்து, கீழாநெல்லி மற்றும் கரிசலாங்கண்ணி  இரண்டையும் சம அளவு (ஒரு கைப்பிடி) எடுத்து அரைக்க வேண்டும். சாறாக இருந்தால் 30 மில்லி அல்லது அரைத்த விழுதாக இருந்தால் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து காலை வெறும் வயிற்றில் உப்பில்லாத மோரில் கலந்து 3 முதல் 5 நாள்கள் குடிக்க வேண்டும். இது காமாலை பாதிப்புகளைச் சரிசெய்ய உதவும். கல்லீரல் இயல்புநிலைக்குத் திரும்ப பொதுவாக 2 முதல் 3 வாரங்கள் ஆகும். இருப்பினும், குறைந்தது 6 வாரங்கள் வரை பத்தியத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *