மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, ஒடிசா, சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இலக்காகக் கொண்ட வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. இவை உலகம் முழுவதும் எதிரொலிக்கும் அமைதி மற்றும் மனிதநேயச் செய்தியை மழுங்கடிக்கும் நோக்கம் கொண்டவை.
அரசியலமைப்புச் சுதந்திரங்களையும், கேரளாவின் பன்மைத்துவ நெறிமுறைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சியும் பொறுத்துக்கொள்ளப்படாது. கொண்டாட்டங்களைத் தடுப்பவர்கள் மீதும், மதப் பாகுபாட்டில் ஈடுபடும் கல்வி நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மதச்சார்பின்மை மற்றும் சகமனித வாழ்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் கேரளா உறுதியாக எதிர்க்கும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.